இஸ்லாமிய மற்றும் அரபு மொழி ஆசிரியர்களுக்கான போட்டியில் இலங்­கையைச் சேர்ந்த முஹம்மத் சப்வான் சாதனை!

Date:

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இஸ்லாமிய மற்றும் அரபு மொழி ஆசிரியர்களுக்கு மத்தியில் நடை­பெ­ற்ற அல்­குர்ஆன் மனனப் போட்­டியில்
இலங்­கையைச் சேர்ந்த அஷ்ஷேக் முஹம்மத் சப்வான் முஹம்மத் பாரூக் (மதனி, அப்பாஸி) முதலாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாத்தளை நிககொல்லையை பிறப்பிடமாக் கொண்ட அஷ்ஷெய்க் சப்வான் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கலா­பீடத்தில் ஷரீஆக் கல்வியை பூர்த்தி செய்து மதீனா இஸ்லாமிய சர்வதேச பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டவியல் பீடத்தில் முதற்தர சித்தியில் தனது கலைமாணி பட்டப் படிப்பை பூர்த்தி செய்து தற்போது சார்ஜாவில் அரபு மற்றும் இஸ்லாமிய ஆசிரியராக பணிபுரிகின்றார்.

பல்வேறு நாட்டைச் சேர்ந்த அரபு மற்றும் இஸ்லாமிய ஆசிரியர்கள் கலந்து கொண்ட இப் போட்டியில் இலங்கை ஆசிரியர் ஒருவர் இறுதிச் சுற்று வரை முன்னேறி முதலாவது இடத்தைப் பெற்றது முதற்தடவையாகும்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...