அரசாங்கத்திற்கு ரூ. 1.7 மில்லியனுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் லக்‌ஷ்மன் யாப்பாவிற்கு குற்றப்பத்திரிகை

Date:

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவியேற்ற இரண்டாம் வருடத்தை நினைவுகூர, லக்ஷ்மன் யாபா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக இருந்த காலத்தில், இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி பத்திரிகைகளில் விளம்பரங்கள் பிரசுரித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 1.7 மில்லியனுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 

அதனடிப்படையில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள குறித்த இருவருக்கும் எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...