கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

Date:

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு மண்டபம்  சனிக்கிழமை (09)  திறந்து வைக்கப்பட்டது.
நிறுவனத்தின் தவிசாளர் எஸ். அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஸ்மார்ட் டைம் தங்கம் மற்றும் நகை நிறுவனத்தின் உரிமையாளர் தொழிலதிபர் அம்ரோஸ் டீன் ஜெயினுல் ஆப்தீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளீதரன், ஜாமியா நளீமியா இஸ்லாமிய கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷேக் ஏ.சி. அகார் முகம்மட் ஆகியோர் கௌரவ அதிதியாகவும் , ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச். முசம்மில், கொழும்பு இன்ஃபினிட்டி ஜெம்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.பி. அமீர்,

பெஸ்டெக் குரூப் (பிரைவேட்) லிமிடெட் தவிசாளர் ஹம்ஸா அபூசலி (ஸமிக் ஹாஜி) , அஸ்மா வூட் நிறுவனத்தின் தவிசாளர் முசாதிக் ஏ. மஜீத் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்திலே புற்றுநோயாளர்களை பராமரிக்கும் இந்நிலையமானது இன மத பேதமின்றி அனைத்து நோயாளர்களுக்கும் இலவசமாக சிகிச்சை, உணவு மற்றும் பராமரிப்பு என்பவற்றை வழக்கி வருகின்றது.

இப் பராமரிப்பு நிலையத்திற்கான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இம் மாநாட்டு மண்டபத்தை தொழிலதிபர் அம்ரோஸ் டீன் ஜெயினுல் ஆப்தீன் மற்றும் துணைவியார் புதல்வர்கள் இணைந்து திரை நீக்கம் செய்து திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.


(எம்.பஹத் ஜுனைட்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...

தேசிய பூங்காக்களை பார்வையிட Online ஊடாக நுழைவுச்சீட்டு

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நேற்று (10) முதல் Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை...