தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

Date:

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பான வெளிநாட்டினர் ஆவர்.

இவர்களுள் சவூதி அரேபியாவுக்குள் ஹாஷிஷ் கடத்தியதற்காக நான்கு சோமாலியர்களும் மூன்று எத்தியோப்பிய நாட்டவர்களும் தெற்குப் பகுதியான நஜ்ரானில் சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

சவூதி நபர் ஒருவர் தனது தாயைக் கொன்றதற்காக தூக்கிலிடப்பட்டார்.

2021 ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான மரணதண்டனைக்கான அதிகாரப்பூர்வமற்ற தடையை சவூதி அதிகாரிகள் நீக்கியதிலிருந்து, அந்த நாடு மரணதண்டனையை துரிதப்படுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டில், சவூதி அரேபியா 345 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றி சாதனை படைத்திருந்தது. அவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் உயிருக்கு ஆபத்தான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட ரிப்ரைவ் (Reprieve) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு அந்த சாதனை முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 230 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, AFP கணக்கின்படி, அவர்களில் 154 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...