சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்காக நடமாடும் சேவை!

Date:

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஹாயில் பிராந்தியத்திற்கான நடமாடும் சேவை இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 29ஆம் திகதியன்று காலை 10:30 முதல் மாலை 4:30 வரை CITY FLOWER HYPER MARKET BUILDING, AL MAHATTAH, HAIL, 2 ஆவது  மாடியில் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் SLBFE  பதிவு/பதிவை புதுப்பித்தல் தொழில் உத்தரவு பத்திரங்களை உறுதிப்படுத்துதல் (Job Order Attestation), தொழில் ஒப்பந்த ஆவணங்களை உறுதிப்படுத்துதல் – Self Agreement Attestation (தனிப்பட்ட முறையில் தொழிலை பெற்றுக் கொண்டவர்களுக்காக), 10 நலன்புரி மற்றும் காப்பீடு தொடர்பான சேவைகள், SLBFE  வழங்கும் சேவைகள் குறித்த விழிப்புணர்வு, வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த முறைப்பாடுகள், சம்பளம் பற்றிய பிரச்சனைகள் /முறைப்பாடுகள், இலங்கைக்கு மீள அனுப்புவதற்கான உதவிகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.

கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்

உங்களது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) /கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பிரதி/இலங்கை தேசிய அடையாள அட்டை இலக்கம்.

உங்கள் இகாமா (வதிவிட அனுமதி அட்டை).

இலங்கைத் தூதரகம் ஹாயில் பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் இந்த பெறுமதி மிக்க வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று இடம்பெற்ற நிலையில் ...

“சர்வதேசப் பயங்கரவாதத்துக்கு” எதிராகப் போராடுவதில் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒன்றாகச் செயற்பட்டன: உறுதிப்படுத்தும் புதிய தகவல்கள்

சர்வதேசப் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இரு தரப்பும் இணைந்து செயற்படுவதற்கான முன்மொழிவொன்றை...

Zoom ஊடாக விசாரணையில் இணைந்தார் ரணில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணிலுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் மறுப்பு.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம்...