லண்டனில் ரில்வின் சில்வாவிற்கு எதிராக தீவிர கண்டனப் போராட்டம்

Date:

இலங்கை புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அங்குள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களின் எதிர்ப்புகளை எதிர்கொண்டதால், லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

கூட்டங்களில் கலந்து கொள்ளவும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுடன் கலந்துரையாடவும் ரில்வின் சில்வா லண்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி லண்டன் கிளை ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்தது.

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் மற்றும் சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்பட்டமை போன்றவற்றிற்கு மூல காரணமாக ரில்வின் சில்வா செயற்பட்டார் எனக் கூறி புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி இந்த போராட்டதை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், அந்த போராட்டத்தையும் மீறி ரில்வின் சில்வா கூட்டத்திற்குள் நுழைய முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இடத்தில் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...