இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

Date:

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மன அழுத்தத்தின் பரவல் அதிகமாக இருப்பதாக பேராதனை மற்றும் களனிப் பல்கலைக்கழங்கள் இணைந்து நடத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

ஆசியாவைப் பொறுத்தவரையில் 16.1 சதவீதமானோர் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

2023ஆம் ஆண்டில் 10 முதல் 24 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் 39 சதவீதமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக 19 வயதுக்குட்பட்டவர்களிடையே 7.0 சதவீதமானோர் உயிர்மாய்ப்புக்கு முயற்சித்துள்ளதாகவும் மற்றும் 35.0 சதவீதமானோர் ஒருவருக்கொருவர் முரண்பாடுகளை அனுபவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வருடந்தோறும் சுமார் 200,000 பேர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். அவ்வாறு புலம்பெயரும் பெண்களில் 75 சதவீதமானோர் திருமணமானவர்கள்.

இவ்வாறு புலம்பெயரும் பெண்களின் பிள்ளைகளுக்கே இந்த மன அழுத்தம் கணிசமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...

இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரிக்கும் யுனிஸ்ஸா பல்கலைக்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து.

புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி மற்றும் மலேஷியாவின் சுல்தான் செய்னலாப்தீன் பல்கலைக்கழகம்...