போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

Date:

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு இன்று ( 27) விஜயம் செய்தார்.

வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக இன்று துருக்கி நாட்டுக்குச் சென்றடைந்தார்.

இந்த நிலையில், சிறப்பு விமானம் மூலம் அங்காரா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தடைந்த போப் லியோ, துருக்கி அதிபர் ரெசப் தயிப் எர்டோகனை நேரில் சந்தித்து உரையாடவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை இஸ்தான்புல் நகரத்துக்குச் செல்லும் போப் லியோ அடுத்த 3 நாள்கள் அங்கு நடைபெறவுள்ள பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் பிற மதங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

இத்துடன், துருக்கியின் இஸ்னிக் நகரத்தில் உள்ள முதல் கிறிஸ்தவ சபையான நைசியா சபையின் 1700 ஆவது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வதற்குத் திட்டமிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...