நிபா வைரஸ் குறித்து அச்சம் தேவையில்லை: சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்.

Date:

இந்தியாவில் தற்போது பரவி வரும் நிபா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் குறித்து இலங்கை உடனடி அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சகா விஜேமுனி வலியுறுத்தினார்.

இலங்கையின் சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சந்தேகத்திற்கிடமான தொற்றுகள் எழுந்தால் தேவையான அனைத்து பரிசோதனை கருவிகளும் நாட்டில் கிடைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து பரவக்கூடிய நிபா வைரஸ், பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ளது.

இதனால் தாய்லாந்து, சிங்கப்பூர், ‍‍ஹெங்கொங் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை உள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...