இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வு மாகும்பர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்றது.
வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஊடகத்துறை பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நியமனம் பெற்ற பெண் பஸ் நடத்துனர்களுக்கென சீருடையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
