கொழும்பில் இன்று ஒரு மணிக்கு பிறகு மாற்று வீதிகளை பயன்படுத்த கோரிக்கை

Date:

இறையடி எய்திய இலங்கை அமரபுர மகா சங்கத்தின் மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று (25) இடம்பெறவுள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இறுதிக் கிரியைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அன்னாரது பூதவுடல் பிற்பகல் 1 மணிக்கு கல்கிஸ்ஸை தர்மபால விஹாரையிலிருந்து வாகன தொடரணியில், கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.

அன்னாரது இறுதிக் கிரியைகளை நடத்துவதற்கான கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து நடைமுறைகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகன தொடரணி பயணிக்கும் வீதி

கல்கிஸ்ஸை தர்மபால விஹாரையிலிருந்து ஸ்ரீ தர்மபால மாவத்தை ஊடாக காலி வீதிக்கு வாகன தொடரணி பிரவேசிக்கவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, காலி வீதியூடாக இடது பக்கம் திரும்பி, காலி வீதியூடாக தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலபிட்டி, வஜிர வீதியிலுள்ள சந்தியின் ஊடாக வலது பக்கம் திரும்பி, எவ்லோக் வீதியில் இடது பக்கத்தின் ஊடாக தும்முள்ள சந்தி, தெஸ்டன் வீதி, கேம்பிரிஜ் பிரதேசம், தேசிய அருங்காட்சியகம் ஊடாக சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணிக்கின்றது.

இந்த வாகன தொடரணி கல்கிஸ்ஸை முதல் சுதந்திர சதுக்கத்தை நோக்கி வருகைத் தருகின்றமையினால், பிற்பகல் 1 மணிக்கு பின்னர் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...

முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!

டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும்...