அசுரன்’ தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது | விஜய்சேதுபதி, பார்த்திபனுக்கும் விருதுகள்!

Date:

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ‘விஸ்வாசம்’ படத்துக்காக டி.இமான் வென்றார்.
2019-ம் ஆண்டுக்கான 67-வது இந்திய தேசிய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘அசுரன்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதிக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ‘விஸ்வாசம்’ படத்துக்காக டி.இமானுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒத்த செருப்பு’ படத்துக்காக நடிகர் பார்த்திபனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2019 அக்டோபரில் வெளியான படம் ‘அசுரன்’. பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த தனுஷ் 2020-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றார். தற்போது அவருக்கு உச்சபட்ச அங்கிகாரமாக தேசிய விருதும் கிடைத்திருக்கிறது. தமிழில் சிறந்த படமாகவும் ‘அசுரன்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, பாராட்டுகளைப்பெற்ற விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன் மட்டுமே நடித்து, அவரே இயக்கி, அவரே தயாரித்த ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கங்கனா ரனாவத் வென்றுள்ளார்.

Popular

More like this
Related

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்: பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நிலைகொண்டு வருவதால் நாட்டின்...

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...