டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு ஒரேநாளில் வந்த 200 தொலைபேசி அழைப்புக்கள் ஏன் ?

Date:

டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு வந்த 200 அழைப்புக்கள்.
டேம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலத்தை அடுத்து அதை அடையாளம் காணும் வகையில் பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடி இருந்தனர். அன்றைய தினம் டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு அந்த சடலத்தை அடையாளம் காணும் நோக்கில் சுமார் 200 தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றதாக தெரிய வந்துள்ளது.

உள்ளுரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இந்த அழைப்புக்கள் தனக்கு வந்ததாக டேம் வீதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இந்த 200 அழைப்புக்களும் தமது அன்புக்குரிய பெண்களைத் தேடி வரும் நபர்களிடம் இருந்தே வந்துள்ளன. மகள், சகோதரி, மனைவி என காணாமல் போன உறவினர்களைத் தேடிக் கொண்டிருக்கும் நபர்களே சடலத்தை அடையாளம் காணும் நோக்கில் தொடர்பு கொண்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் இவர்கள் பற்றிய விசாரணைகள் தேங்கி உள்ளமையும் தற்போது தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...