சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

Date:

சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடந்த வருடம் நீடிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலமானது ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முடிவடைவடைந்துள்ளது.

இந்நிலையிலேயே, ஏப்ரல் 1ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை 6 மாதங்களால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சாரதி அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிப்பதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...