ஜெரூசலமில் இடம்பெற்ற மோதலில் பாலஸ்தீனியர்கள் பலர் காயமடைந்துள்ளனர்!!

Date:

ஜெரூசலமின் அல் அக்ஸா பள்ளிவாசல் உட்பட ஏனைய இடங்களிலும் இஸ்ரேலிய பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் 178 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதோடு 88பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அல் அக்ஸா பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் கடந்த பல வாரங்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றதோடு கடந்த இரண்டு வாரங்களாக பதட்ட நிலை அதிகரித்துள்ளது.

பாலஸ்தீன குடியேற்றவாசிகள் இஸ்ரேலிய படையினரால் வெளியேற்றப்படுவதை எதிர்த்தே பாலஸ்தீன படையினர் போராடி வருகின்றனர்.கடந்த வாரத்தில் ஷேக் ஜர்ராவில் வசிப்பவர்களும் , பாலஸ்தீனிய மற்றும் சர்வதேச ஒற்றுமை அமைப்புக்களும் தமது ஆதரவை பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக வழங்கியிருந்தனர்.

கடந்த சில நாட்களாக எல்லையில் உள்ள இஸ்ரேலிய பொலிஸார் கண்ணீர்ப் புகை , தோட்டாக்கள் மற்றும் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியதோடு பல இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

“வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்”  நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின்...

கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய...

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி மஹிந்த பராக்கிரம...

இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி!

இங்கிலாந்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம்...