ஏப்ரல் மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக பாபர் அசாம்

Date:

ஐ.சி.சி. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த விருதினை வென்ற வீரர்களின் பெயர் விபரங்களை நேற்யை தினம் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

2021 ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணித் தலைவரும், ஒரு நாள் போட்டியில் துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான பாபர் அசாம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரில் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் அவரது நிலையான மற்றும் சிறப்பான துடுப்பாட்டத்திற்காக ரசிகர்கள் மற்றும் ஐ.சி.சி வாக்களிக்கும் அகாடமியால் ஏப்ரல் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2021 ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக அவுஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

ஹீலி நியூசிலாந்திற்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடினார், 51.66 சராசரி மற்றும் 98.72 ஸ்ட்ரைக் வீதம் 155 ஓட்டங்கள் பெற்றார்.

நியூசிலாந்திற்கு எதிரான அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றியில் முன்னணி ஓட்ட அடித்த வீரராக அவரது முயற்சிகள் காணப்பட்டன.

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் மாதாந்தம் சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்கத்கது.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...