இந்தியா போன்று இலங்கை மாறும் அபாயம் என எச்சரிக்கை

Date:

 

இந்தியா போன்று இலங்கை மாறும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை வைத்திய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் நிலைமைக்கமைய ஒரு வேலைத்திட்டத்தை பின்பற்றி வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தாமல் இருப்பதற்கு தீரமானம் மேற்கொள்ளவில்லை என்றால் இந்தியா போன்ற நிலைமை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் மிகவும் பொறுப்புடன் சுகாதார ஆலோசனைகளை பிற்பற்றுமாறு சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா குணசேகர பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களுக்கு உரிய சுகாதார முறையை பின்பற்றவில்லை என்றால் நிச்சயம் இந்தியாவின் நிலைக்கு தள்ளப்படுவோம்.

வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் ஏனையவர்களும் முகக் கவசம் அணிந்து மிகவும் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். இல்லை என்றால் வீட்டில் அனைவருக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டு நாடு அபாய கட்டத்தை நோக்கி சென்று விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...