நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Date:

கடும் மழையுடனான வானிலை இன்றுடன் குறைவடைகின்ற போதிலும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளதால் நாட்டில் உள்ள பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சற்று குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், தெதுருஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளில் 4 வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

எனவே, தெதுருஓயாவிற்கு அருகில் வாழும் மக்கள் அது குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நிலவும் வெள்ளப்பெருக்கு நிலை படிப்படியாகக் குறைவடையக்கூடும் எனவும் நீர்ப்பாசன திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...