அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது முகத்துவாரத்தில் கடற்கரையில் எச்.எம் மர்சூக் என்பவருக்கு சொந்தமான ஆழ்கடல் வள்ளத்தில் கடலுக்குச் சென்றிருந்த மீனவர்கள் இன்று சுமார் 270 கிலோ எடையுள்ள கொப்பூர் மீன் ஒன்றைப் பிடித்து கரைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர் இந்த மீன் 170,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.