பயணக்கட்டுப்பாட்டை மீறி பயணித்த பேருந்துகளில் மூவருக்கு கொரோனா

Date:

நாட்டில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை மீறி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி 3 அதி சொகுசு பேருந்துகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் செங்கலடி – பதுளை வீதியில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் இருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் குறித்த பேருந்துகள் சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த பேருந்துகளுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான எவ்வித அனுமதிப்பத்தரமும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர் பேருந்தில் பயணித்த பயணிகள் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொற்றாளர்கள் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...