பயணக்கட்டுப்பாட்டை மீறி பயணித்த பேருந்துகளில் மூவருக்கு கொரோனா

Date:

நாட்டில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை மீறி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி 3 அதி சொகுசு பேருந்துகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் செங்கலடி – பதுளை வீதியில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் இருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் குறித்த பேருந்துகள் சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த பேருந்துகளுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான எவ்வித அனுமதிப்பத்தரமும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர் பேருந்தில் பயணித்த பயணிகள் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொற்றாளர்கள் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...