நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,727ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக 82 உயிரிழப்புக்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கடந்த சில நாட்களாகவே, கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகளவான கொவிட் உயிரிழப்புக்கள், நேற்றைய தினம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது