ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம்

Date:

தாலிபான்கள் ஆப்கனிஸ்தானின் தலைநகரான காபூலை கைப்பற்றி முன்னேறியதால் அஷ்ரப் கானி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் கானி மற்றும் அவரது குடும்பத்தை வரவேற்றுள்ளதாக ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை ஒரு வீடியோ உரையில், ஆப்கானிஸ்தானில் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காகவும் “ஒரு பெரிய பேரழிவு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் தான் நான் அவ்வாறு செய்தேன் என அஷ்ரப் கானி கூறியுள்ளார்.

அவர் ஒரு பெரிய பணத்தொகையுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்தார் என்ற வதந்திகள் “முற்றிலும் ஆதாரமற்றவை” மற்றும் “பொய்கள்” என்றும் அவர் கூறினார்.

அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறியதற்காக மற்ற ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...

ஆளும் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஷூரா சபை சந்திப்பு

ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய...