தந்தை, தாய், மகள் ஆகிய மூவரையும் பலியெடுத்த கொரோனா! புத்தளத்தில் சோகம்!

Date:

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வேப்பமடு பகுதியைச் சேர்ந்த தாயும், மகளும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்தி அஜிபா (வயது 51) மற்றும் அவரது மகள் பாத்திமா சஹானா (வயது 37) ஆகிய இருவருமே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று முன்தினம் (06) உயிரிழந்துள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்த குறித்த தாயும், மகளும் ஒரே வீட்டில் வசித்து வந்தவர்கள் எனவும் குறித்த தாய் காலையும், அவரது மகள் அதே தினத்தன்று நண்பகள் வேளையும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த குறித்த தாயும், மகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவ்விருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த தாயினதும், மகளினதும் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரு ஜனாஸாக்களும் ஓட்டமாவடியில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம்,கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, உயிரிழந்த சித்தி அஜிபா எனும் 51 வயதானவரின் கணவரான முஹம்மது நிஸ்தார் (வயது 56) என்பவர் கடந்த 4ம் திகதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...