ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறுமா? | நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவு

Date:

கொழும்பில் நாளை(16) ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிசார்  முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு பொலிசார் வாழைத்தோட்டம்  நீதிமன்றிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.

எனினும், குறித்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று(15) நிராகரித்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு 5 நீதிமன்றங்கள் தடை விதித்தன

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க பல நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பித்துள்ளன.

அதன்படி புதுக்கடை 5 ஆம் இலக்கம், மஹர 1 ஆம் மற்றும் 2 ஆம் இலக்கங்கள், கடுவலை மற்றும் மஹரகம் ஆகிய நீதிமன்றங்களினால் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்கள்.

தென்கொரியாவின் சர்வதேச மதநல்லிணக்கக் குழுவின் பிரதிநிதிகளும், தர்ம சக்தி அமைப்பின் பிரதிநிதிகளும்...

இலவச பாதணி விநியோகம்: 3,000 ரூபா பெறுமதியான வவுச்சர்களுக்கு அனுமதி!

தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் துறவு...

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

ரஷ்யாவில் LGBT விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு கடும் சிறைத்தண்டனை: முதல்முறை கடுமையான நடவடிக்கை!

ரஷ்யாவில்   (LGBT) இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையின் கீழ் தொடரப்பட்ட முதல் வழக்கில்,...