கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுமியின் நேற்று ( 08) காணமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.13-15 வயதிக்குட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் மற்றும் உறவுக்கார சிறுமி ஒருவரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் சிறுமிகளின் பெற்றோர்களிடத்தில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.