சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகள் நாளை மறுதினம் ஆரம்பம்!

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் சாதாரண தர மற்றும் உயர்தரங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை நாளை மறுதினம் (08) முதல் கட்டாயம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் 10,11 ,12 மற்றும் 13 மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை‌ ஆரம்பிப்பதற்கு கொவிட் 19 தடுப்பு செயலணி பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது ‌.

கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.தரம் 6 முதல் 9 வரையான கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை 50% மாணவர்களுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இத் தீர்மானம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்னவினால் வெளியிடப்பட்ட வழிகாட்டிக்கு அமைவாகவே எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...