T20 Updates: தீர்மானம் மிக்க போட்டி இன்று; முதலாவது அரையிறுதியில் களமிறங்கவுள்ள நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள்!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று (10) முதலாவது அரையிறுதிப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன.ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இலங்கை இந்திய நேரப்படி இரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

நியூசிலாந்தை பொறுத்தவரையில் 2007,2016 ஆம் ஆண்டுகளில் அரையிறுதி வரை முன்னேறி தோல்வியை தழுவியிருந்தது.எனவே இம் முறை இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கு நியூசிலாந்து கடுமையாக போராடும் என கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் 2010 ஆம் ஆண்டின் உலகக் கிண்ண செம்பியன்களாக திகழ்கின்றனர்.இந்த முறை கிண்ணத்தை கைப்பற்றும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிக விறு விறுப்பாக நடைபெற்று வருகின்ற இத் தொடரில் குழு 1 லிருந்து இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளும் ,குழு 2 லிருந்து பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாளை (11)இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...