மூத்த அரசியல் ஆய்வாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமையாளருமான  ஏ.ஜே.எம்.நிழாம் காலமானார்

Date:

மூத்த அரசியல் ஆய்வாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமையாளருமான  ஏ.ஜே.எம்.நிழாம் நாம்புலுவ பஸ்யாலையில்  காலமானார்.

கொழும்பு, புதுக்கடையை பிறப்பிடமாகக்கொண்ட அவர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர் என்பதுடன் 1988 ஆம் ஆண்டு இடம்பெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் அக்கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

1990 ஆம் ஆண்டு “முஸ்லிம் காங்கிரஸ் ஆக்கமா? அழிவா?” என்ற தன்னுடைய முதலாவது நூலை எழுதி வெளியிட்டு அதன் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இடம் பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டார்.

இது தவிர, அவர் தேசிய பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (15) மாலை 4.00 மணியளவில் நாம்புலுவையில் இடம்பெறும்

மேலும் “தலைசிறந்த  செயற்பாட்டாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமைமிக்கவருமான  ஏ.ஜே.எம். நிலாமின் மறைவு சமூகத்துக்கு பாரிய இழப்பாகும்” என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீரிகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் எம்.யூ ஆதிக் தெரிவித்துள்ளார்.

 

நன்றி Siyane News

Popular

More like this
Related

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்கள்.

தென்கொரியாவின் சர்வதேச மதநல்லிணக்கக் குழுவின் பிரதிநிதிகளும், தர்ம சக்தி அமைப்பின் பிரதிநிதிகளும்...

இலவச பாதணி விநியோகம்: 3,000 ரூபா பெறுமதியான வவுச்சர்களுக்கு அனுமதி!

தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் துறவு...

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

ரஷ்யாவில் LGBT விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு கடும் சிறைத்தண்டனை: முதல்முறை கடுமையான நடவடிக்கை!

ரஷ்யாவில்   (LGBT) இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையின் கீழ் தொடரப்பட்ட முதல் வழக்கில்,...