‘எங்கள் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க இங்கே தான் இருக்கிறோம்’: உக்ரைன் ஜனாதிபதி வீடியோ வெளியீடு

Date:

‘நாங்கள் அனைவரும் இங்கே இருக்கிறோம். எங்கள் இராணுவம் இங்கே உள்ளது. நாங்கள் அனைவரும் இங்கு எங்கள் சுதந்திரத்தையும், நாட்டையும் பாதுகாக்கிறோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக தலைநகரில் தலைமைத் தங்கி பாதுகாப்பதாக முக்கிய உதவியாளர்களுடன் சபதம் செய்து வெள்ளிக்கிழமை மத்திய கீவ் நகரில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இதன்போது, ‘நாங்கள் அனைவரும் இங்கே இருக்கிறோம். எங்கள் இராணுவம் இங்கே உள்ளது. சமுதாயத்தில் குடிமக்கள் இங்கே இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் இங்கு எங்கள் சுதந்திரத்தையும், நாட்டையும் பாதுகாக்கிறோம், அது அப்படியே இருக்கும், ‘என்று ஜெலென்ஸ்கி ஜனாதிபதி கட்டிடத்திற்கு வெளியே நின்று கூறினார்.

உக்ரைன் மீது கடந்த 24 ஆம் திகதி ரஷ்யா இராணுவப் போர் நடவடிக்கையை தொடங்கியது. முதல் நாளிலேயே வான்வழிக் கட்டமைப்பை கையகப்படுத்தியது.

இரண்டாவது நாளான நேற்று உக்ரைனுக்குள் தரை வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. செர்னோபில் அணு உலையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

துறைமுக நகரங்களை சுற்றிவளைத்து உக்ரைனுக்கு கடல்வழியாக உதவிகள் கிடைக்காமல் முடக்கியது.

நேற்று மாலை கீவ் நகரிலிருந்து மூன்று மைல் தொலைவில் முகாமிட்ட ரஷ்யப் படைகள் அரசுப் பணியாளர்கள் குடியிருப்பைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு இசைவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

ரயில்வே திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 17 மற்றும் 18...

இலங்கையில் அமெரிக்க-இஸ்ரேலிய இந்திய தரப்பின் இருப்புக்கள், முஸ்லிம்கள் தொடர்பான NPP அரசின் கொள்கையில் செல்வாக்கு செலுத்துகின்றதா??

-லத்தீப் பாரூக் இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரி காலஞ்சென்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா...

பாடசாலையில் 2 மாணவர்களைச் சேர்க்க ரூ. 2.5 லட்சம் இலஞ்சம்: உனவட்டுன பாடசாலை அதிபர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

காலி - உனவட்டுன, ருமஸ்ஸல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின்...