அதிவேகமாக ஓட்டிய பஸ் சாரதிக்கு பாடம் கற்பித்த பயணிகள்!

Date:

(File Photo)

கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்றையதினம் ஒரே திசையில் போட்டிப்போட்டு பயணித்த 2 பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று, அதே பாதையில் பயணித்த (சி.டி.பி) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை முந்திச் செல்ல முடியாத வகையில் வீதியை மறித்தமையால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னர், தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர், சி.டி.பி பஸ் சாரதியைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, சி.டி.பி பஸ்ஸில் இருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கத் தொடங்கியுள்ளனர்.

பயணிகளிடமிருந்து தப்பிக்க, அவர்கள் இருவரும் கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்குள் ஓடியதுடன் அவர்கள் பொலிஸாரார் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து சி.டி.பி பஸ்ஸின் சாரதி கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...