ஆப்கான் ஆழ்துளைக்கிணற்றில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு!

Date:

ஆப்கானிஸ்தானின் காபுல் மாகாணத்தில்
ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து சிக்கிக்கொண்ட 5 வயது சிறுவன் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வறண்ட கிராமமான ஷோக்காக்கில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, சிறுவன் ஹைதரின் தாத்தாவான ஹாஜி ஆழ்துளைக்கிணறு தோண்டும் இடத்தில் சில உதவிகளை செய்து வந்துள்ளார்.அப்போது சிறுவன் அந்த இடத்தில்
ஆழமுடைய அந்த ஆழ்துளை கிணற்றில் 10 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டான்.ஆரம்பத்தில் அங்கிருந்தவர்கள் சிறுவனை கயிறு மூலமாக மீட்க செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தததையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்று ஜே.சி.பி இயந்திரங்களின் தோண்டி கிட்டத்தட்ட 4 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்று மதியம் மீட்கப்பட்டான்.மீட்கப்பட்ட சில நிமிடங்களிலெயே சிறுவனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. பின்னர் ஹெலிக்காப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...