Sl Vs AUS T20 Updates: இலங்கை அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றி இலக்கு: போட்டி தொடர்கிறது!

Date:

அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 5 ஆவதும், இறுதியுமான போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக மெல்பர்னில் நடைபெற்று வருகிறது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஆரொன் பின்ச், முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.

அதன்படி, முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

போட்டியில் அதிகபடியாக மெத்யூ வேட் 43 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.இலங்கை அணியின் பந்து வீச்சில் துஸ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்கள்.

இந் நிலையில், 155 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட இலங்கை அணி களமிறங்கியுள்ளது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...