அதிவேகமாக ஓட்டிய பஸ் சாரதிக்கு பாடம் கற்பித்த பயணிகள்!

Date:

(File Photo)

கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்றையதினம் ஒரே திசையில் போட்டிப்போட்டு பயணித்த 2 பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று, அதே பாதையில் பயணித்த (சி.டி.பி) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை முந்திச் செல்ல முடியாத வகையில் வீதியை மறித்தமையால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னர், தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர், சி.டி.பி பஸ் சாரதியைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, சி.டி.பி பஸ்ஸில் இருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கத் தொடங்கியுள்ளனர்.

பயணிகளிடமிருந்து தப்பிக்க, அவர்கள் இருவரும் கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்குள் ஓடியதுடன் அவர்கள் பொலிஸாரார் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து சி.டி.பி பஸ்ஸின் சாரதி கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...