அதிவேகமாக ஓட்டிய பஸ் சாரதிக்கு பாடம் கற்பித்த பயணிகள்!

Date:

(File Photo)

கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்றையதினம் ஒரே திசையில் போட்டிப்போட்டு பயணித்த 2 பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று, அதே பாதையில் பயணித்த (சி.டி.பி) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை முந்திச் செல்ல முடியாத வகையில் வீதியை மறித்தமையால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னர், தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர், சி.டி.பி பஸ் சாரதியைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, சி.டி.பி பஸ்ஸில் இருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கத் தொடங்கியுள்ளனர்.

பயணிகளிடமிருந்து தப்பிக்க, அவர்கள் இருவரும் கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்குள் ஓடியதுடன் அவர்கள் பொலிஸாரார் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து சி.டி.பி பஸ்ஸின் சாரதி கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...