இலங்கை பங்களாதேஷிடம் கடன் கோரிக்கை: முதலாவது கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் நீட்டிப்பு

Date:

பங்களாதேஷிடம் இருந்து மேலதிக நிதியுதவிக்கான கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களிடம் பேசிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நாணய மாற்றமாக மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கோரியுள்ளது.

இது முன்னைய பங்களாதேஷ் வழங்கிய 250 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் கூடுதலாகும். அதேநேரம் முந்தைய கடனை திருப்பிச் செலுத்தும் காலம் பங்களாதேஷ் வங்கியால் நீட்டிக்கப்பட்டதாக நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றொரு கடனுக்கான சமீபத்திய கோரிக்கை தற்போது பரிசீலனையில் உள்ளது என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அப்துல் மொமன் மேலும் கூறினார்.

மேலும் பங்களாதேஷ் நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறிய அவர், நிலைமை எவ்வாறு உருவாகும் என்பதையும் அவர்கள் மதிப்பீடு செய்து வருவதாகவும், நிலைமையைப் பொறுத்து இலங்கையின் கோரிக்கை குறித்து முடிவெடுக்கும் என்றும் கூறினார்.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...