‘இலங்கை, தற்காலிக நெருக்கடிகளை விரைவில் தீர்க்கும்’: சீனா நம்பிக்கை

Date:

தற்காலிக பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விரைவில் இலங்கை மீளும் என நம்பப்படுவதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம்,இடம்பெற்ற சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

‘இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் முயற்சிகள் மற்றும் ஒற்றுமையுடன், நாடு தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளித்து இன்னும் பெரிய வளர்ச்சியைத் தழுவும் என்று நம்பப்படுகிறது’ என்று தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும், இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததிலிருந்து, சீனாவும் இலங்கையும் பரஸ்பர புரிந்துணர்வை வெளிப்படுத்தி, பரஸ்பர ஆதரவை வழங்கி வருகின்றன.

இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா தனது திறனை அனுமதிக்கும் வகையில் உதவிகளை வழங்கி வருவதாகவும், தொடர்ந்தும் அதனைச் செய்யும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...