இலங்கை பங்களாதேஷிடம் கடன் கோரிக்கை: முதலாவது கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் நீட்டிப்பு

Date:

பங்களாதேஷிடம் இருந்து மேலதிக நிதியுதவிக்கான கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களிடம் பேசிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நாணய மாற்றமாக மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கோரியுள்ளது.

இது முன்னைய பங்களாதேஷ் வழங்கிய 250 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் கூடுதலாகும். அதேநேரம் முந்தைய கடனை திருப்பிச் செலுத்தும் காலம் பங்களாதேஷ் வங்கியால் நீட்டிக்கப்பட்டதாக நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றொரு கடனுக்கான சமீபத்திய கோரிக்கை தற்போது பரிசீலனையில் உள்ளது என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அப்துல் மொமன் மேலும் கூறினார்.

மேலும் பங்களாதேஷ் நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறிய அவர், நிலைமை எவ்வாறு உருவாகும் என்பதையும் அவர்கள் மதிப்பீடு செய்து வருவதாகவும், நிலைமையைப் பொறுத்து இலங்கையின் கோரிக்கை குறித்து முடிவெடுக்கும் என்றும் கூறினார்.

Popular

More like this
Related

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...