அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களே வன்முறையைத் தூண்டினர்: பிரசன்ன ரணதுங்க

Date:

அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய சிலரே ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தை தூண்டியதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றசம்சாட்டியுள்ளார்.

மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது ‘ஜே.வி.பி உறுப்பினர்கள் இதில் ஈடுபட்டதை நாங்கள் அறிவோம். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஜே.வி.பியின் முன்னாள் தேசியப்பட்டியல் அரசியல்வாதி ஒருவர் உடனிருந்தமைக்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமைதியான போராட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும், கூட்டத்தை கலைக்க அரசாங்கம் குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

‘வன்முறையால் யாராவது இறந்துவிடுவார்கள் என்று போராட்டத்தை தூண்டியவர்கள் எதிர்பார்த்திருந்திருப்பார்கள் என்னும் அமைச்சர் இதன்போது குற்றம்சாட்டியுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...