பாரவூர்தி மோதியதில் 10 வயது சிறுவன் உயிர் பலி!

Date:

இன்று (11) காலை யாழ்ப்பாணம் – சத்திர சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.

மோட்டார் சைக்கிள் மீது பாரவூர்தி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளில் சிறுவனும், தாயாரும் பயணித்திருந்த நிலையில் பின்னால் வந்துகொண்டிருந்த பாரவூர்தி மோதியுள்ளது.

இதில் சிறுவன் வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் தாவடியை சேர்ந்த அபித்தன் அபிநயன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.

சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார் பாரவூர்தியின் சாரதியை கைது செய்ததுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...

நாளாந்த சேவையில் காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் !

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து...