முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு நோன்பு திறக்க தேவையான உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

Date:

கொழும்பு சிறைச்சாலையின் வேண்டுகோளின் பிரகாரம் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையினால் இரண்டாவது வருடமாகவும் சிறைச்சாலையிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

விசேடமாக 30 நாளும் நோன்பு நோற்பதற்காகவும் மற்றும் நோன்பு திறக்கும் இப்தார் விசேட நிகழ்வுகளுக்காகவும் அதற்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த குறித்த உணவுத் தொகையினை அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, கொழும்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் டி. ரஜீவ எஸ். சில்வாவிடம் உத்தியோகபூர்மாக கையளித்தார்.

இதன் போது பெப்ரல் அமைப்பின் உப தலைவரும் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தலைவர் கே. என். டீன் மற்றும் சிறைச்சாலையின் சமூக நலன்புரி அதிகாரி மகேஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

30 நாட்களும் சஹர் வேளையில் நோன்பு பிடிப்பதற்கான உணவுப் பொருட்களுடன் 30 நாட்களும் நோன்பு திறப்பதற்கான கஞ்சி,பெருநாள் உணவு உட்பட சமைப்பதற்கு தேவையான ஏனைய சகல உணவுப் பொருட்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...