நாட்டில் இன்றும் (13) நாளையும் (14) மின்சாரத் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் நோக்குடன், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் முதல் மின்சாரத் துண்டிப்பு இடம்பெறும் காலப்பகுதியைக் குறைப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.