இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்!

Date:

பாராளுமன்றத்தில் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதற்காக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி ஆகியோர் கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்டதையடுத்து அவர்களை பாராளுமன்ற அறையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் பணித்தார்.

அதன் பிரகாரம், அவர்களை அப்புறப்படுத்த சார்ஜன்ட் நடவடிக்கை எடுத்தார்.

இரு எம்.பி.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் அநாகரீகமாக நடந்து கொண்டனர்.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை வெளியேற்றுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பணிப்புரை விடுத்தார்

அதேவேளை இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியேறும்வரை சபாநாயகர் சபைக்கு வரமாட்டார் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...