இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்!

Date:

பாராளுமன்றத்தில் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதற்காக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி ஆகியோர் கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்டதையடுத்து அவர்களை பாராளுமன்ற அறையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் பணித்தார்.

அதன் பிரகாரம், அவர்களை அப்புறப்படுத்த சார்ஜன்ட் நடவடிக்கை எடுத்தார்.

இரு எம்.பி.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் அநாகரீகமாக நடந்து கொண்டனர்.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை வெளியேற்றுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பணிப்புரை விடுத்தார்

அதேவேளை இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியேறும்வரை சபாநாயகர் சபைக்கு வரமாட்டார் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...