சிலாபத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஒரு குழுவிற்கும் அரசாங்கத்திற்கு எதிரான மற்றுமொரு குழுவிற்கும் இடையில் சிலாபம் நகர பகுதியில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தலைமையிலான அரச சார்பு செயற்பாட்டாளர்கள் புத்தளம் நோக்கி பேரணியாகச் சென்ற போது, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மற்றுமொரு குழுவைச் சேர்ந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை எதிர்கொண்டு மோதலில் ஈடுபட்டதையடுத்து பதற்றமான நிலைமை உச்சக்கட்டத்தை எட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோதலில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.