முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு நோன்பு திறக்க தேவையான உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

Date:

கொழும்பு சிறைச்சாலையின் வேண்டுகோளின் பிரகாரம் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையினால் இரண்டாவது வருடமாகவும் சிறைச்சாலையிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

விசேடமாக 30 நாளும் நோன்பு நோற்பதற்காகவும் மற்றும் நோன்பு திறக்கும் இப்தார் விசேட நிகழ்வுகளுக்காகவும் அதற்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த குறித்த உணவுத் தொகையினை அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, கொழும்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் டி. ரஜீவ எஸ். சில்வாவிடம் உத்தியோகபூர்மாக கையளித்தார்.

இதன் போது பெப்ரல் அமைப்பின் உப தலைவரும் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தலைவர் கே. என். டீன் மற்றும் சிறைச்சாலையின் சமூக நலன்புரி அதிகாரி மகேஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

30 நாட்களும் சஹர் வேளையில் நோன்பு பிடிப்பதற்கான உணவுப் பொருட்களுடன் 30 நாட்களும் நோன்பு திறப்பதற்கான கஞ்சி,பெருநாள் உணவு உட்பட சமைப்பதற்கு தேவையான ஏனைய சகல உணவுப் பொருட்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...