கொழும்பு காலி முகத்திடலில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு: விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு!

Date:

(File Photo)
கொழும்பு காலி முகத்திடலில் இன்று இளைஞர்- யுவதிகள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் பொலிஸாரால் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்துத் துறையினரும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது காலி முகத்திடலில் இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொள்ளும் தாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் இருந்து விசேட பொலிஸ் குழுக்களும் இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகம் அல்லது பிரதமர் இல்லத்துக்குள் நுழைய முயற்சித்தால், பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...