ஜனாதிபதியை சந்திக்க, சுயேட்சையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் குழு மறுப்பு!

Date:

(File Photo)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று இரவு நடைபெறவிருக்கும் கலந்துரையாடலை புறக்கணிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேட்சையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

சுயேட்சைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் சாந்த பண்டாரவை அரசாங்கத்திற்கு மாற்றியமைத்ததற்கும் இராஜாங்க அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து சுயேட்சைக் குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இன்றைய கலந்துரையாடலை புறக்கணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் சுயாதீன பாராளுமன்றக் குழுவின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று இரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபச்சவுக்கும் அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலைப் புறக்கணிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள் குழு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...