பாரவூர்தி மோதியதில் 10 வயது சிறுவன் உயிர் பலி!

Date:

இன்று (11) காலை யாழ்ப்பாணம் – சத்திர சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.

மோட்டார் சைக்கிள் மீது பாரவூர்தி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளில் சிறுவனும், தாயாரும் பயணித்திருந்த நிலையில் பின்னால் வந்துகொண்டிருந்த பாரவூர்தி மோதியுள்ளது.

இதில் சிறுவன் வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் தாவடியை சேர்ந்த அபித்தன் அபிநயன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.

சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார் பாரவூர்தியின் சாரதியை கைது செய்ததுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...