ரம்புக்கனை சம்பவத்தில் சுயாதீன விசாரணை அமைப்பு தலையிட வேண்டும்: சஜித்

Date:

ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை, பொலிஸ் விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சமரசம் செய்யும் சுயாதீன விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.

இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

‘பாதுகாப்புச் செயலர், பொதுப் பாதுகாப்பு அமைச்சர், ஐ.ஜி., மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட எஸ்.எஸ்.பி., மற்றும் எஸ்.எஸ்.பி.க்கு பின்னால் நின்ற அரசியல் சக்திகள் ஆகியோரை வரவழைக்குமாறு சபாநாயகரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இதேவேளை சபாநாயகர் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால், கட்சித் தலைவர்கள் ஒருமித்த குரலில் ஜனாதிபதியை பதவி விலகச் சொன்னால், நான் அதில் கலந்துகொள்ளத் தயார்’ என பிரேமதாச கூறினார்.

இதேவேளை ரம்புக்கனையில் கொல்லப்பட்ட சமிந்த லக்சானின் பிள்ளைகள் மற்றும் அவர்கள் எதிர்கால செயற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பேற்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டின் நிதிப் பிரச்சினை தொடர்பாக தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று நாட்டில் அரச பயங்கரவாதம் தலைதுாக்கியுள்ளது.

எனவே இந்த சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் இளைப்பாறிய நீதியரசர் ஒருவர் தலைமையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.

சம்பவத்தின்போது குறைந்த பலப்பிரயோகம் பயன்படுத்தப்பட்டதாக அமைச்சர் கூறியபோதும் துப்பாக்கி சூட்டை நடத்தியமை குறைந்த பலப்பிரயோகமா என்று சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...