உண்டியல் முறையில் டொலர்களை மாற்ற முயன்ற இருவர் கைது!

Date:

உண்டியல் முறையின் ஊடாக அமெரிக்க டொலரை மாற்ற முற்பட்ட இருவர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் சட்டவிரோதமாக 47,000 அமெரிக்க டொலர்களை மாற்ற முயன்றதாக அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பரிமாற்று முறைமைகளை தவிர்த்து சட்டவிரோதமான முறைகளில் வெளிநாட்டு பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் டொலர்களை உண்டியல் முறையின் கீழ் மாற்ற முயன்ற போது கிடைக்கப்பட்ட இரகசிய தகவல் அடிப்படையில் பொலிஸ்hர் இன்று கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் 40 மற்றும் 52 வயதுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...