தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சேமித்து வைத்த 4400ரூ. பணத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
குறித்த பணத்தை அவர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து, இலங்கையர்கள் நிதி நெருக்கடியால் அவதிப்படுவதால் தனது உண்டியல் பணத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்ததாக கூறியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த பில்சா சாரா எனும் மாணவி வீட்டில் தனக்கென உண்டியலில் சேர்த்து வந்த 4400 (இந்திய ரூபாய்) பணத்தினை மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் வழங்கியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதால் இலங்கை மக்களுக்காக தனது சேமிப்பு பணத்தினை அன்பளிப்பாக வழங்குவதாக சிறுமி கூறியுள்ளார். சிறுமியின் இந்த செயற்பாட்டை மாவட்ட ஆட்சியாளர், பாராட்டி உள்ளார்.