‘அரசாங்கத்தை வெளியேற்றுவோம், சிஸ்டத்தை மாற்றுவோம்’ :பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஆரம்பமானது!

Date:

நுகேகொடை விஜேராம வீதியில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்புப் பேரணி தற்போது பாராளுமன்றத்தை நோக்கிப் பயணிக்கிறது. நுகேகொட மற்றும் நாவல பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று பிற்பகல் ஆரம்பமானது.

மாணவர்கள் கறுப்பு ஆடை மற்றும் சிவப்பு நிற துணியை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இந்த எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

‘அரசாங்கத்தை அகற்றுவோம்! சிஸ்டத்தை மாற்றுவோம்!’. ‘வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா’ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுமாறும், நாட்டில் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பாகக் கருதப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக கொழும்பில் இளைஞர் எதிர்ப்பாளர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் இலங்கை முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...