‘அரசாங்கத்தை வெளியேற்றுவோம், சிஸ்டத்தை மாற்றுவோம்’ :பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் ஆரம்பமானது!

Date:

நுகேகொடை விஜேராம வீதியில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்புப் பேரணி தற்போது பாராளுமன்றத்தை நோக்கிப் பயணிக்கிறது. நுகேகொட மற்றும் நாவல பிரதேசங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று பிற்பகல் ஆரம்பமானது.

மாணவர்கள் கறுப்பு ஆடை மற்றும் சிவப்பு நிற துணியை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இந்த எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

‘அரசாங்கத்தை அகற்றுவோம்! சிஸ்டத்தை மாற்றுவோம்!’. ‘வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா’ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுமாறும், நாட்டில் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பாகக் கருதப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக கொழும்பில் இளைஞர் எதிர்ப்பாளர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் இலங்கை முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...